tamilnadu
நா நயம் மிக்க தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது… மு க ஸ்டாலின் நெகழ்ச்சி…!
சென்னையில் கலைவாணர் அரங்கில் இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு நூறு ரூபாய் நாணய வெளியீட்டு விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங். இவர் முதலில் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். மேலும் கலைஞர் கருணாநிதி தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த விழாவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கி நாணயத்தை பெற்றுக்கொண்டார். அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் மு க ஸ்டாலின் பேசியிருந்ததாவது “என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்ற சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்த கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரே இங்கு வந்திருப்பது மிக மிகப் பொருத்தமானது.
பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே முதல் தேர்வாக இருந்தார். அனைத்து கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் நாணயம் வெளியிட பொருத்தமானவர். நா நயம் மிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது பொருத்தமானது.
அதிலும் நூற்றாண்டு விழா நாயகருக்கு நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டிருக்கின்றது. நாம் கொண்டாடிய கலைஞரை இன்று இந்தியாவை கொண்டாடப் போகின்றது என்பதுதான் இந்த விழாவின் அடையாளம். கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்திருந்தார்.