8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியரின் கேவலமான செயல்…!

8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியரின் கேவலமான செயல்…!

8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஓரசோலை ஓட்டப்பார்வை என்ற பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் 2022 ஆம் ஆண்டு முதல் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி மற்றும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அப்போது அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியிருக்கின்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் குன்னூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து ஆசிரியர் ரஞ்சித் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.