தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் திடீர், திடீரென மழை பெய்து வருகிறது. வறண்ட வானிலை காணப்பட்ட இடங்களிலெல்லாம் பெய்து வந்த இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. மழை பொழிவு தொடருமா? என்கின்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது இதனையடுத்து.
மேற்கு திசை காற்றே பருவ நிலையில் இந்த மாற்றங்களுக்கு காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலே இப்போது பெய்த மழையின் அளவு அதிகமாக இருந்தது. மாவட்டங்களின் நகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கான தட்ப வெப்ப சூழ்நிலை குறித்தும் மழை பெய்வது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் சொல்லியுள்ளது. இதன்படி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமானது முதல் லேசான மழை பெய்ய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளது.
ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வத்ற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
மேற்குத் திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாடு, புதுசேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் பெய்யும் என எதிர்பார்க்கபபடும் மழை நாளை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவதை தவிர்க்க சில தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.











