Connect with us

இரவு 10 மணி வரை… எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

tamilnadu

இரவு 10 மணி வரை… எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும், தமிழகத்தில் பல இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் இன்று இரவு 10 மணி வரை மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. அதன்படி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

More in tamilnadu

To Top