- Homepage
- Latest News
- தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
மேலும் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தமிழகத்தில் இன்று காலை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. அதன்படி காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் என்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மலைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது