தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. அதிலும் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது.
மேற்கு தொடர்ச்சி மலை அருகில் இருப்பதால் இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருவாரூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை , அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் பொறுத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.