தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் மாலை 6 மணி வரை 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. அதன்படி கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், தஞ்சை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மலைக்கு வாய்ப்பு இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மேலும் சென்னையில் பொறுத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.