ரெயிலில் படிக்கட்டில் பயணித்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… அதிர வைக்கும் சிசிடிவி காட்சி…!

ரெயிலில் படிக்கட்டில் பயணித்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… அதிர வைக்கும் சிசிடிவி காட்சி…!

ரயிலில் படிக்கட்டில் பயணித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இளைஞர்கள் ஸ்டைல் என்கின்ற பெயரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது, ரயிலில் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி அல்லது நின்றபடி பயணம் செய்து வருகிறார்கள். இது ஒரு சில சமயங்களில் அவரின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது கிடையாது.

இது போன்ற சம்பவங்களால் உயிரிழப்புகள் நேர்ந்த போதிலும் தொடர்ந்து இளைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளாமல் பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடலூரை சேர்ந்த பாலமுருகன் என்கின்ற 24 வயதான இளைஞர் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்திருக்கின்றார். அப்போது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் வேகமாக சென்றபோது பாலமுருகன் தவறி விழுந்திருக்கின்றார். நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் பின்னர் ரயிலுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார்கள்.