அண்ணா அறிவாலயத்திற்குள் பீர்பாட்டில் வீச்சு… போலீசார் தீவிர விசாரணை…!

அண்ணா அறிவாலயத்திற்குள் பீர்பாட்டில் வீச்சு… போலீசார் தீவிர விசாரணை…!

அண்ணா அறிவாலயத்திற்குள் பீர்பாட்டில் வீசியவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குள் இரண்டு பீர் பாட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இரு சக்கர வாகனத்தில் வந்து அண்ணா அறிவாலயத்திற்குள் இரண்டு பீர் பாட்டில்கள் வீசிய கோவர்தனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முதற்கட்ட விசாரணையில் கோவர்தன் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் மேற்பாட்டில்கள் வீசியது ஏன் என்று போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.