Ctrlm
Ctrlm

குளு குளு குற்றாலம்…சிலு சிலு சாரல்…இன்றைய சீசன் அப்-டேட்…

குற்றாலம் நேற்று அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டத்தினால் ஸ்தம்பித்தது. எல்லா அருவிகளிலும் அதிமாகவே காணப்பட்டது மக்கள் கூட்டம். பார்க்கும் திசையெல்லாம் பரவசாமாக குளித்து மகிழ்ச்சிடைய வருகை தந்தவர்களின் காட்சிகளே. ஒவ்வொரு நாளும் சிற்சில மாற்றங்கள். இப்படித் தான் இருந்தது கடந்த வாரத்தின் நிலை. வெள்ளப்பெருக்கு , குளிக்கத் தடை இதனால் சோர்வடைந்தனர் குளிக்க வந்த பொது மக்களும், சுற்றுலா பயணிகள். இயல்பு நிலை திரும்ப வியாழக்கிழமை வரை ஆனது குற்றாலத்தில்.

வார இறுதி நாட்கள் என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரித்தது மக்கள் கூட்டம். சனிக்கிழமை எதிர்பார்த்தது போல இல்லாமல் போனாலும் அருவிகளின் ஆனந்த குளியல் போட வந்தவர்கள் ஏமாற்றப் படவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். சாரலும், காற்றும் கண்ணைக்கட்டி ஏமாற்றி விட்டுச் சென்றாலும், அருவிகளில் விழுந்த தண்ணீரின் அளவு ஆர்ப்பரித்தது.

Five Falls

ஞாயிற்றுக்கிழமையை பொறுத்த வரை இதமான நிலையே இருந்தது. கூட்டத்தின் பிடியிலேயே இருந்தது குற்றாலம் என சொல்வதே சரியாக இருக்கும். இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி குற்றாலம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் அவ்வப்போது விழுந்து மகிழ வைத்தாலும், இடையே இடையே வெயிலும் தலை காட்டியது.

அருவிகள் அனைத்திலும் கொட்டி வருகிறது தண்ணீர் நேற்றைய நிலையை விட இன்று சற்று குளிமை அதிகரித்துள்ளது. சாரலும் இன்று சிலிர்க்க வைக்கிறது. வாரத் துவக்கம் என்பதாலேயே இன்று சுற்றுலா பயணிகளின் வருகையில் தொய்வு இருக்கிறது. மிதமான கூட்டமே காணப்பட்டது. எதிர்பார்ப்போடு வருபவர்களை ஏமாற்றவில்லை குற்றாலத்தில் உள்ள எல்லா அருவிகளும் இன்று.