மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்… நமீதா பரபரப்பு புகார்…!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்… நமீதா பரபரப்பு புகார்…!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாக நடிகை நமீதா புகார் அளித்திருக்கின்றார். பாஜக உறுப்பினரும் நடிகையுமான நமிதா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று இருக்கின்றார். அப்போது அதிகாரி ஒருவர் அவரிடம் உங்களுடைய மதம் என்ன? எந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பியதாக தெரிகின்றது.

இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருந்தேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் உங்களுடைய மதம் என்ன எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேட்டார். கோவில் நிர்வாகம் தன்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழ்களை கேட்டார்கள்.

தான் இந்து மதத்தை சேர்ந்தவள், என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைகளுக்கு கூட கிருஷ்ணனின் பெயரை தான் வைத்துள்ளேன். இது போன்ற நடப்பது மிக வருத்தமாக உள்ளது. இந்தியாவில் எந்த கோவிலிலும் தன்னிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டதில்லை. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். அமைச்சர் சேகர்பாபுரிடம் இது தொடர்பாக புகார் அளித்திருக்கின்றேன். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்” என நமிதா தெரிவித்திருந்தார்.