தமிழ்நாட்டில் 34 சதவீதம் அதிகம்… வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை… வானிலை ரிப்போர்ட்…!

தமிழ்நாட்டில் 34 சதவீதம் அதிகம்… வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை… வானிலை ரிப்போர்ட்…!

தமிழகத்தில் இந்த முறை தென்மேற்கு பருவமழை 34 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை தெரிவித்து இருக்கின்றது.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். இந்த பருவமழையின் போது தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு மழை பொழிவு பெறும். இந்நிலையில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது.

பல்வேறு மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. தென்மேற்கு பருவமழையால் குறைவான மழை பொழிவை பெறும் மாநிலமான தமிழகத்தில் இந்த முறை அதிக அளவு மழை பெய்து இருக்கின்றது. அதன்படி ஜூன் 1-ம் தேதி தொடங்கிய மழை செப்டம்பர் 16ஆம் தேதி வரை 356 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது ,

இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மற்றும் புதுவையில் பெய்யும் சராசரி மழைப்பொழிவு 269.3 மில்லி மீட்டர் தான். எனவே தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் 34 சதவீதம் அதிகமாக பெய்து இருக்கின்றது என்று வானிலை ரிப்போர்ட் தெரிவித்து இருக்கின்றது.