தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதேபோல் வடகிழக்கு பருவமழையும் விரைவில் தொடங்க இருப்பதால் வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் மதியம் மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகின்றது.
இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் 9-ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் நாளை முதல் வரும் 9ம் தேதி வரை தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.