உலக புகழ்பெற்ற நடராஜர்களில் ஒருவராக உத்திரகோசமங்கையில் வீற்றிருக்கும் நடராஜர் இருக்கிறார். இங்குள்ள நடராஜர் சிலை ஆளுயர பச்சை மரகதக்கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலையாகும்.
இந்த நடராஜர் சிலைக்கு வருடத்துக்கு ஒரு முறைதான் ஆருத்ரா அபிசேகம் நடக்கும்.அப்போது மரகத சிலையில் பூசப்பட்ட சந்தனம் களைக்கப்பட்டு நடராஜர் காட்சி அளிப்பார்.
மற்ற நாட்களில் சந்தனம் பூசியே காணப்படும் இந்த சிலைக்கு ஆருத்ரா தரிசனம் அன்று முதல் நாள் சந்தனம் கலைக்கப்படும்.
மீண்டும் அடுத்த நாள் ஆருத்ரா தரிசனம் அன்று சந்தனம் பூசப்படும். இந்த விழாவிற்கு பாரதிய ஜனதா பிரமுகர் தேசியவாதி ஹெச்.ராஜா வந்து சென்றார். உத்திரகோசமங்கை கோவிலுக்கு வந்து நடராஜரையும் மங்களநாதர் மங்களாம்பிகையும் வணங்கி சென்றார்.
திருஉத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.
அனைவருக்கும் திருவாதிரை நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/6acmLfUQfN
— H Raja (@HRajaBJP) December 20, 2021