கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு. அலைக்கற்றை ஊழல் என்ற இந்த ஊழலில் ஒன்னரை லட்சம் கோடியை ஊழல் செய்ததாக முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரான திமுகவை சேர்ந்த ஆ.ராசா மீதும் திமுக எம்.பி கனிமொழி மீதும் வழக்கு தொடரப்பட்டு நீண்ட வருடங்கள் வழக்கு நடந்த நிலையில். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போதைய மத்திய அரசு அந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த 2ஜி ஊழல் குறித்து நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பாரதிய ஜனதாவை சேர்ந்த எஸ்.வி சேகர் கூறியிருப்பது,
உளுந்து வடையில `ஓட்டைய`போட்டவனும் தமிழன்தான்! அலைக்கற்றையில்,`ஆட்டைய` போட்டவனும் தமிழன்தான்! பட்டா இல்லாத இடத்தில் கொட்டாய் போட்டவனும் தமிழன்தான்!. ஈமு கோழியிலே பணம் போட்டவனும் தமிழன்தான்! . இங்கே மாஞ்சு மாஞ்சு ஸ்ட்டேடஸ் போட்டவனும்! பாஞ்சு பாஞ்சு லைக் போடறவனும் தமிழன்தான் என கூறியுள்ளார்.

