மம்தா பானர்ஜியை கட்டி அணைத்து கொரோனா பரப்புவேன் பாஜக தேசிய செயலாளர் பேச்சால் சர்ச்சை

மம்தா பானர்ஜியை கட்டி அணைத்து கொரோனா பரப்புவேன் பாஜக தேசிய செயலாளர் பேச்சால் சர்ச்சை

கொரோனா வைரஸ் லாக் டவுன், மற்றும் முதல்வர் மம்தா ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் கொரோனா விதிமுறைகள் மிக கடுமையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை மிக மோசமாக நடத்தியதாகவும் கொரோனா வந்து இறந்தவர்களின் உடல்களை மிக மோசமாக நடத்தியதாகவும் அப்பா, அம்மா, மகன், என யாரையும் யாருடைய உடல் அருகில் கூட விடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதற்காக பேசிய பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா ஒரு கூட்டத்தில் பேசும்போது,நம்முடைய தொண்டர்கள் கரோனாவை விட மிகப்பெரிய எதிரியுடன் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் அவர்கள் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் முகக்கவசம் இல்லாமல் நமது தொண்டர்களால் போரிட முடியும் என்றால், கரோனா வைரஸுக்கு எதிராகவும், நம்மால் முகக்கவசம் இல்லாமல் போரிட முடியும்.

நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன் நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால், உடனடியாக மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவரைக் கட்டி அணைத்துக்கொள்வேன்.

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா நோயாளியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு மிகவும் பரிதாபத்துகுரிய வகையில் நடக்கிறது அதனால் அவரை கட்டி அணைத்தால் அவருக்கு கொரோனா நோயை பரப்பி விட்டு விடலாம் என்ற அடிப்படையில் அனுபம் ஹஸ்ரா பேசியது சர்ச்சையான நிலையில் இது குறித்து அவர் மீது போலிசில் புகார் அளிக்கப்படும் என மம்தா தரப்பு தெரிவிக்கிறது.