Corona (Covid-19)
உங்ககிட்ட ரேஷன் கார்டு இல்லையானாலும் பரவாயில்லை! மகிழ்ச்சியான செய்தி!!
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனை அடுத்து, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது.
அதனை தொடர்ந்து, அரசு தரப்பு ஏற்கனவே குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் 19 வகை மளிகைப் பொருட்களை ரூ. 500-க்கு வழங்க திட்டமிட்டிருந்தது. இதனனிடையே ரேஷன் கார்டு இல்லாதவர்கள், அத்தியாவசிய பொருட்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று பலதரப்பட்ட மக்களின் மனதில் கேள்விக்குறியாக எழுந்தது.
இந்நிலையில் உங்ககிட்ட ரேஷன் கார்டு இல்லையானாலும் பரவாயில்லை, என்று தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்புள்ள 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக செய்தி வெளியிட்டுள்ளது.