souther-railway-job-for-covid-19
souther-railway-job-for-covid-19

சென்னைக்கு நேரில் யாரும் வர வேண்டாம்! தெற்கு ரயில்வேவின் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரொனா தொற்று ஏற்பாடமல் இருக்க அரசு பல்வேறு முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு மருந்துகள் முதல் அத்தியாவாசிய பொருட்கள் வரை மக்களின் நலனுக்காக அனைத்தும் கையிருப்பில் வைத்து, மக்களுக்கும் ஒளிவு மறைவின்றி தெரிவித்துமுள்ளது.

இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்காக ரயில்வேத்துறை அறிவித்துயிருந்த தேர்வை தொலைபேசி உரையாடல் மூலமே நடக்கும் என்றும், லேப் – டெக்னீஷன், தூய்மை பணியாளர் தேர்வுக்காக சென்னைக்கு நேரில் தேர்வர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி உரையாடல் மூலம் நாளை தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பால் ஏராளமானோர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேரில் தேர்வு என்று வதந்தி பரவியதால் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் தேர்வர்கள் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.