தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 527 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 266 பேருக்கும், கடலூரில் – 122 , விழுப்புரம் – 49, பெரம்பலூர் – 25, திருவண்ணாமலை – 11 பேர், திருவள்ளூர் மற்றும் தென்காசி – 9, திருச்சி – 4, தஞ்சை, திருப்பத்தூரில் ஒருவருக்கும் இன்று கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 527 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,023 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 4ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
