நேற்று இரவு டெல்லி ஃபெரோஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய இளம் வீரர் ப்ரித்விஷா 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.ஷிகர் தவன் 7 பவுன்டரிகளுடன் 51 (47) ரன்கள் எடுத்து ப்ராவோ பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.ஷ்ரேயஸ் ஐயர் 18 (20) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பன்ட் அதிரடியில் இறுங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த போது ப்ராவோ பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
12 ஓவர்களில் உயர்ந்த ரன்ரேட், பின் படிப்படியாக குறைந்தது.
பெரிய அளவில் ரன் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 147/6 எடுத்திருந்தனர்.சென்னை சார்பில் ப்ராவோ 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சஹர் , ஜடேஜா, இம்ராம் தாஹிர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர், ராயுடு 5 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் ஷர்மா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஷேன் வாட்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.சென்னை அணி 73 ரன்கள் எடுத்திருந்த போது, 3 சிக்ஸ், 4 பவுன்டரி விளாசின ஷேன் வாட்ஸன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிஷப் பன்ட் ஸ்டம்பிங்கில் அவுட்டானார்.
மறுமுனையில் ரெய்னா அதிரடியில் இறங்க 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஜாதவ் 27 (34), தோனி 32 (35), ப்ராவோ 4(3) ரன்கள் எடுத்திருந்தனர்.
இறுதியில் சென்னை அணி , 19.4 ஓவரில் 150/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.