புல்வாமா தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்த நாட்டை உலகக் கோப்பை தொடரில் இருந்து விலக்க வேண்டும் என்று மறைமுகமாக பாகிஸ்தானைக் குறிப்பிட்டு, இந்திய கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி க்கு கடிதம் அனுப்பியது, எனிலும் ஐ.சி.சி அதனை நிராகரித்தது. ஐ.சி.சி ஆலோசணைக் கூட்டம் அதன் தலைவர் ஸஷாங் மனோகர் தலைமையில் துபாயில் நடைப்பெற்றது. அதில் இதுபோன்ற விவகாரத்தில் ஐ.சி.சி தலையிடாது என தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்கள் பங்கேற்று வருவதாகவும், இது போன்ற கோரிக்கைகளுக்கு அவர்கள் முக்கியத்தவம் அளிப்பதில்லை என்றும் ஐ.சி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது