ipl 2019 dhoni run out

தோனி அவுட்டே இல்லை.. அம்பயர் தூக்கு போட்டு சாவனும்.. அழுவும் சிறுவன் (வீடியோ)

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் சிறுவன் அழுது புலம்பும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில், 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

எப்படியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த அந்த அணியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். இந்நிலையில், இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் சிறுவன் ஒருவன் ‘ தோனி அவுட்டே இல்லை.. மூன்றாவது அம்பயர் தூக்கு போட்டு சாவனும்’ என அழுது புலம்பும் வீடியொ வெளியாகியுள்ளது.