விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்திய மண்ணில் டி-20 தொடரை இழந்த நிலையில் இன்று ஒரு நாள் அரங்கில் இந்திய அணி ஆக்ரோஷத்துடன் போராடி சாதிக்கும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தோனிக்கு பயிற்சியின் போது வலது முன்னங்கையில் அடிப்பட்டதால், அவர் இன்றையப் போட்டியில் தொடர்வது சந்தேகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு பதில் ரிஷப் பண்ட் கீப்பீங் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஹைதரபாத் இராஜிவ் காந்தி மைதானத்தில் இப்போட்டி நடக்க உள்ளது