குணமடைந்த நிலையில் யாஷிகா

குணமடைந்த நிலையில் யாஷிகா

தமிழ் சினிமா உலகில் வேகமாக வளர்ந்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் பிஸியாக இருந்த நடிகை யாஷிகா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று மகாபலிபுரம் சாலையில் காரில் வேகமாக சென்றபோது கார் நிலைகுலைந்து விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார்.

உடன் வந்த அவரது தோழி வள்ளி செட்டி பவனி உயிரிழந்தார். யாஷிகா ஆஸ்பத்திரியில் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் முதலில் அவரின் தோழி இறந்த தகவல் சொல்லப்படவில்லை. சமீபத்தில் விஷயம் தெரிந்த பின் தோழிக்காக வருத்தம் தெரிவித்து டுவிட் இட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் லேசாக குணமான நிலையில் புன்னகை பூக்கும் புகைப்பட, ஒன்று வெளியாகியுள்ளது.