Published
1 year agoon
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.
இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்துமாறு கூறப்பட்டது.
இதையடுத்து, காருக்கு இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த அபராதத் தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்குமாறும் தெரிவித்தார்.
நீதிபதியின் இந்த கருத்து தன் மனதை பாதிப்பதாக கூறிய விஜய் அந்த கருத்துக்களை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு விஜய்க்கு எதிராக நீதிபதி சொன்ன கருத்துக்களை இன்று நீக்கி உத்தரவிட்டது.
கேலிக்கு உள்ளான பீஸ்ட் பட காட்சி- ஒரே நாளில் சமூக வலைதள டிரெண்டிங் ஆனது
அப்பா அம்மாவை கூட பார்ப்பதில்லையா- இணையத்தை சுற்றி வரும் எஸ்.ஏ.சியின் பாசமான பாவமான வீடியோ
விஜய்யின் 67வது பட வில்லன் யார் தெரியுமா?
சிறிய நடிகர்களா? அஜீத் விஜய்க்கு சொம்படிக்காதீர்கள்-ப்ளூ சட்டை மாறன்
விஜய்யின் முழு இண்டர்வியூ பார்க்காதவர்களுக்காக வெளியிட்டது சன் டிவி
நெல்சனை பிரியாணி சாப்பிட சொன்ன விஜய்- நெல்சன் சொன்ன பதில்