Latest News
உக்கிரமான பெண் தெய்வத்தை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்
ராகு மகா திசையும் ஜென்ம சனியும் நடப்பில் உள்ளவர்கள் உடனடியாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் மது அருந்துவதை கைவிட வேண்டும்.
இரண்டையும் கைவிட்டவர்கள் உக்கிரமான பெண் தெய்வம் ஒன்றை தினமும் வழிபட்டு வருவதால் ஜென்ம சனி காலத்தில் நிம்மதியாக வாழ முடியும்.
சந்திர மகா திசையில் ஜென்ம சனியும் நடப்பில் உள்ளவர்கள் உடனடியாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் மது அருந்துவதை கைவிட வேண்டும்.
இரண்டையும் கைவிட்டவர்கள் விநாயகர் அல்லது பைரவர் மந்திரம் தினமும் ஜெபித்து வர வேண்டும் .இதன் மூலமாக ஜென்மச்சனி காலத்தில் ஓரளவு நிம்மதியாக வாழ முடியும்.
செவ்வாய் பகவான் ஆட்சியாகி கேது பகவான் உச்சமாகி இருவரும் ஒன்று சேர்ந்து அல்லது லக்னத்திற்கு கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நிற்க பிறப்பவர்கள் சூட்சுமமாக வேறு உலகங்களுக்கு அடிக்கடி பயணம் செல்லும் பயிற்சியை பெறுவார்கள். அடிக்கடி அவ்வாறு சென்று வருவார்கள்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்
