தென்காசி அருகேயுள்ளது புகழ்பெற்ற தோரணமலை முருகன் கோவில் .தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் மூண்டுள்ள இந்த சூழலில் போர் நின்று அமைதி நிலவ இந்த கோவிலில் இன்று பிரார்த்தனை செய்யப்பட்டது.
உக்ரைனில் போர் விலகிடவும், இந்திய மாணவர்கள் மற்றும் மக்கள் நலமுடன் நாடு திரும்பவும், போர் நிறுத்தம் ஏற்பட்டுு நாட்டு மக்கள் நிம்மதியுடன் வாழவேண்டி, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோயில் அடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் பங்கேற்ற, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஓதுவார் மூர்த்தி சங்கரசட்டநாதன் தேவாரம், திருப்பாவை பாடினார்.நாள் முழுவதும் மலை மேல் உள்ள முருகனுக்கு உக்ரைனில் போர்விலக கோரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.