புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக போராடி வருகின்றனர். இதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை ஆரம்பத்தில் விவசாயிகளை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தியதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் கடந்த ஜனவரி 26ல் கடும் பேரணி டெல்லியில் நடந்தது. இதில் கலவரம் ஏற்பட்ட நிலையில் பலரை போலீஸ் தேடி வருகின்றது.
இந்த நிலையில் இவர்கள் டெல்லி எல்லையில் உள்ள திக்ரியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்று டெல்லி சென்ற திருமாவளவன் அங்குள்ள விவசாயிகளை சந்தித்து போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.
#NewsUpdate | திக்ரி எல்லையில் போராடிவரும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்!#SunNews | #FarmersProtest | @thirumaofficial pic.twitter.com/KE5HMYofnE
— Sun News (@sunnewstamil) February 10, 2021
https://twitter.com/sunnewstamil/status/1359431940684742659?s=20