தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்

தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்

தேனி மாவட்ட சுற்றுபயணத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார். இதில் புதிய காவலர் குடியிருப்பை திறந்து வைத்தார். பிறகு உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

தீயணைப்பு நிலையத்துக்கு சென்ற அவர் அங்கிருந்த வருகை பதிவேடுகளையும் , ஆவணங்களையும் பார்வையிட்டு அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்தார்.

பின்பு அங்கிருந்த சில பொதுமக்களை சந்தித்து ஆட்சியில் ஏதாவது குறைகள் இருந்தா சொல்லுங்க என கூறினார். முதல்வர் இயல்பாக பல பொதுமக்களிடம் கலந்துரையாடியது மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.