திரையரங்குகளில் எப்படி அமரவேண்டும்-மாதிரி புகைப்படம் வெளியீடு

திரையரங்குகளில் எப்படி அமரவேண்டும்-மாதிரி புகைப்படம் வெளியீடு

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் அடைக்கப்பட்ட தியேட்டர்கள் 8 மாதங்களுக்கு பின் வரும் 10ம் தேதி திறக்கப்படுகிறது.திறக்கப்பட்ட உடன் தீபாவளி வேறு வருவதால் கூட்டம் அலைமோதும் இதை கருத்தில் கொண்டு தியேட்டர்களில் எவ்வாறு சீட்கள் அமைக்கப்பட வேண்டும் மாதிரி புகைப்படத்தை வெளியிட்டது.

தலைமை செயலாளர் உத்தரவிட்டு கையெழுத்துடன் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. செஸ் போர்டு சைஸில் உள்ள அந்த புகைப்படத்தில் 8 பேர் அமரும் வகையில் உள்ள வரிசையில் எவ்வாறு மக்கள் அமர வேண்டும் என தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.