இயக்குனர் சீனு ராமசாமி கூடல் நகர் என்ற படத்தின் மூலம் கவனம் பெற்றவர். தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, மாமனிதன் என பல படங்களை இயக்கியுள்ளார் சில படங்கள் படப்பிடிப்பில் உள்ளது. விஜய் சேதுபதியை இவர்தான் அறிமுகப்படுத்தினார்.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கடந்த 6 மாத காலமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், சீனு ராமசாமி கவலையுடன் ஒரு டுவிட் போட்டுள்ளார்.
திரையரங்கம் மக்கள் ஒன்றுகூடும் கொண்டாட்ட உணர்வின் வெளிப்பாடு விஞ்ஞான வளர்ச்சியில் சினிமா கருப்பு வெள்ளை ஃபிலிமில் தொடங்கி டிஜிட்டல் என எல்லாமே மாறிவிட்டது ஆனால் திரையரங்க அனுபவம் மாறவில்லை. அகன்ற திரை வாழும். திரையரங்கம் சேரமுடியாத படைப்புகள் ஓடிடி தளத்தில் மீளும் என கூறியுள்ளார் இவர்.

