காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர்

காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர்

இரண்டு நாட்களாக நிவர் புயல் அட்ராசிட்டிஸ் மக்களை பாடாய்படுத்தி விட்டது. இரண்டு நாட்களாக கடும் கனமழையால் சென்னை நகரம் தத்தளித்தது. புயலால் மின்சாரத்தடை என வீட்டில் யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது.

ஒரு பக்கம் மழை மற்றும் புயல் அவசர சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் காவல்துறை கடுமையான முறையில் போராடியது.

காவல்துறையை பாராட்டி சென்னை கமிஷனர் ஒரு டுவிட் போட காவல்துறைக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி.

நெகிழ்ச்சி அளிக்கிறது! ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள சென்னை காவல்துறை நிர்வாகம் மற்றும் காவலர்களுக்கு எனது உளம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.