கனவு அணியில் சச்சினுக்கே இடமில்லையா? சர்ச்சைக்குள்ளான பாக் வீரர்!

கனவு அணியில் சச்சினுக்கே இடமில்லையா? சர்ச்சைக்குள்ளான பாக் வீரர்!

பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி தனது உலகக் கனவு அணியில் சச்சின் மற்றும் இம்ரான் கான் ஆகியவர்களைத் தேர்வு செய்யாதது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

முன்னாள் வீரர்கள் தங்களுக்கான கனவு அணியைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவது அவ்வபோது நடக்கும். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கனவு அணியை இப்போது அறிவித்துள்ளார்.

அதில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கானும் தேர்வு செய்யப்படவில்லை. அவரது எக்காலத்துக்குமான அணியில், சயீத் அன்வர், மற்றும் கில்கிரிட்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், ரிக்கி பாண்டிங் 3 வது இடமும், தென் ஆப்பிரிக்காவின் ஜேக்குலின் கல்லீஸ் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்து விராட் கோலி, இன்சமாம் உல் ஹக் அடுத்த இரண்டு இடத்திற்கு தேர்வு செய்துள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர்களாக வாசிம் அக்ரம், கிளென்மெக்ராத்,  சோயிப் அக்தர், ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராகத் தேர்வு செய்துள்ளார்.