சமூக வலைதளங்கள் முழுவதும் நடிகர் சூர்யா பற்றிய பேச்சாகவே உள்ளது. சூர்யா கலக்கி விட்டார் தைரியமாக பேசி விட்டார் என சூர்யாவின் ரசிகர்களும் சில நெட்டிசன்களும் சூர்யாவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
நீட் தேர்வினால் நேற்று முன் தினம் மூன்று மாணவர்கள் இறந்த நிகழ்வை வைத்து பல அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
வழக்கமாக சமூக பிரச்சினைகளில் கருத்து சொல்லும் சூர்யா இந்த பிரச்சினையிலும் தலையிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீட்டை கடுமையாக சாடிய சூர்யா, கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் நீதிமன்றங்கள் செயல்படுகிறது, ஆனால் மாணவர்களை மட்டும் பரிட்சை எழுத செல்லலாம் என சொல்வது எவ்வகையில் நியாயம் என கேட்டுள்ளார். அவரது முழு அறிக்கை இதோ.
My heart goes out to the three families..! Can't imagine their pain..!! pic.twitter.com/weLEuMwdWL
— Suriya Sivakumar (@Suriya_offl) September 13, 2020

