Connect with us

Latest News

இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Published

on

இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால், எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் கொழும்பில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ள ராம்புக்கானா பகுதியில் நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது வன்முறை ஏற்பட்டது.

போலீசார் மீது சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தலைநகர் கொழும்பில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பாருங்க:  எஸ்.ஜே சூர்யாவின் கள்வனின் காதலி பாட்டை இந்த மாதிரி கேட்டு இருக்கிங்களா
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா