Latest News
பாம்பு பிடிப்பதில் கை தேர்ந்தவர் மரணம்
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ளது கோடிகாலா என்ற கிராமம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி என்பவர். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். பிடித்த பாம்புகளை காட்டிற்குள் பாதுகாப்பாக விட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஒரு கிராமத்தில் 5 அடி நீளமுள்ள நாகம் ஒன்றை பிடித்த இவர் மது அருந்தி இருந்ததால் சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் கையிலேயே கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமான பாம்பு 5 முறை இவரை கொத்தியுள்ளது.
இதனால் அங்கேயே சுருண்டு விழுந்த இவர் மரணமடைந்தார்.
