செஸ் போட்டியில் வென்ற பிரக்யானந்தாவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

செஸ் போட்டியில் வென்ற பிரக்யானந்தாவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா சமீபத்தில் வீழ்த்தினார்.

சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் இதில் இந்தியா தரப்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றார்

ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா, 2 போட்டிகளை டிரா செய்தார். மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு அவரை தோற்கடித்தார்.
தமிழகத்தை சேர்ந்த பிரக்யானந்தா இதனால் பலரால் அறியப்பட்டார். முதல்வர் ஸ்டாலினால் பாராட்டப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் பிரக்யானந்தாவை வாழ்த்தியுள்ளார். நீங்கள் வெற்றி பெற்றது பெருமகிழ்ச்சியை தருகிறது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.