Published
11 months agoon
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவன் உயிருடன் இருக்கையில் 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம். இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நடத்தை செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்தியத் தண்டனைச் சட்டம் 494 ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937-இன் படி அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தமிழக அரசின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் சேகர்பாபு
கொரோனாவால் களையிழந்த ஓணம்
அறிவியலை நம்பும் தமிழக அரசு- தடுப்பூசி குறித்து கரு.பழனியப்பன்
தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு!
தமிழகத்தில், நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதியளித்த தமிழக அரசு!
பள்ளிகள் திறந்த பின் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!