Entertainment
சகோதரி மரணம்- சடங்குகளில் பங்கேற்ற சத்யராஜ்
தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் சத்யராஜ். இவரின் சகோதரி கல்பனா மன்றாடியார் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் இறந்த சத்யராஜின் சகோதரிக்கு ஈமச்சடங்குகள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நடந்தது.
அந்த சடங்குகளில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
