மாதத்தில் ஒருமுறை அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பும், பெளர்ணமிக்கு இரண்டு நாட்கள் முன்பும் பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். பிரதோஷம் சிவனுக்கும் நந்தீஸ்வரருக்கும் செய்யப்படும் ஒரு விழாவாகும்.
புராணத்தில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் நேரத்தில் ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.
இப்படி ஒரு நிகழ்வு சனிக்கிழமையில் நடந்ததாக கருதப்பட்டு சனிக்கிழமையே பிரதோஷ நாளாக கருதப்படுகிறது. அதனால் வருடத்தில் பிரதோஷம் சனிக்கிழமைகளில் வந்தால் அது மஹாப்பிரதோஷம் எனக்கருதப்படுகிறது. இந்த நாட்களில் கூட்டம் கோவில்களில் அலைமோதும். சாதாரண பிரதோஷத்தை காட்டிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் அதிக பலன்கள் ஏற்படும். அத்தகைய சிறப்பு மிக்கதொரு நாளில் நாளைய சனிப்பிரதோஷம் வருகிறது.
பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறும்

