சாணிக்காகிதத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பை பார்த்து மிரண்ட சூரி

சாணிக்காகிதத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பை பார்த்து மிரண்ட சூரி

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காகிதம் படம் வெளிவந்தது. அமேசான் ஓடிடியில் இந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது, கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தன் குடும்பத்தை கொலை செய்த வில்லன் குரூப்பை கீர்த்தி சுரேஷ் ரத்தம் தெறிக்க தெறிக்க கொலை செய்வதுதான் கதை. எல்லாரையும் குத்தி கிழித்து குடலை உருவி மாலை போடுகிறார் கீர்த்தி சுரேஷ்.

மிகவும் கொடூரமான குணம் கொண்ட பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை. இப்படத்தை பார்த்து நடிகர் சூரியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூரி கூறியிருப்பதாவது,

சாணிக்காயிதம் படம் பார்த்தேன். கீர்த்தியின் நடிப்பு பார்த்து மிரண்டு விட்டேன். பல விருதுகள் உங்களுக்காக காத்திருக்கிறது தங்கச்சி.
கீர்த்தி சுரேஷ்

அசாத்திய உழைப்பு தந்துள்ள

அருண் மாதேஸ்வரன்

சார்,

செல்வராகவன்

சார் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள் என சூரி கூறியுள்ளார்.