ரஜினி புது எச்சரிக்கை

ரஜினி புது எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஐதராபாத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். வரும் 29ல் சென்னை வரும் ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 31ல் தனது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்

பூத் கமிட்டிக்கு
மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து,மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25ல் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என்றும்
ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது.