Entertainment
ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மிகப்பெரும் கலைஞர்களுக்கு மட்டுமே இந்த விருது கொடுக்கப்படும். இதற்கு முன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஜினிகாந்துக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் தன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார்
-ரஜினிக்கு இந்த விருது, கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.