Connect with us

Entertainment

வாவ் ரஜினியின் தீவிர ரசிகர் மறைந்த முத்துமணி பற்றி தெரியாத ஆச்சரிய தகவல்கள்

Published

on

ரஜினியின் தீவிர ரசிகரான முத்துமணி என்பவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். ரஜினிக்கு முதன் முதலில் மன்றம் ஆரம்பித்தது இவர்தான்.

ரஜினிதான் இவரது திருமணத்தை நடத்தி வைத்தார். இவரை பற்றிய பழைய நினைவுகளை ரஜினியின் தீவிர ரசிகர்கள் எடுத்து உறைக்கிறார்கள்.

நல்ல மனிதன். அவரின் தந்தை (பிச்சை) பில்டிங் contractor. அன்றைய நாட்களில் மதுரையில் ரசிகர் மன்றங்கள் தங்கள் அபிமான நடிகரின் போட்டோவை பிரேம் செய்து மன்றம் பெயர் எழுதி மாட்டுவார்கள். ரஜினியின் 4வது படம் கவிக்குயில்(1977 ஜீலை 29) மதுரை ஶ்ரீதேவியில் வெளியான போது ஒரு photo பார்க்கிறேன்

Super Star of the era Rajinikanth Fans Association என்று ஆங்கிலத்தில் (ஆச்சரியம்) எழுதியிருக்க மன்றம் துவக்கப்பட்ட நாள் பார்த்தால் 10.02.1976, அதாவது மூன்று முடிச்சு கூட வெளியாகாத நேரம். தாணு போன்றவர்கள் நான்தான் முதலில் பட்டம் கொடுத்தேன் என்று சொல்லும்போதும்கூட அதற்கும் முன்பாக

பட்டம் வழங்கியவர். நான் கல்லூரி படிக்கும் காலம். ஆகவே  சிவாஜி படங்கள் தவிர அனைத்து படங்களையுமே opening ஷோ பார்ப்பது வழக்கம். ரகுபதி ராகவன் ராஜாராம், பு.ஒரு கே.குறி, 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், காயத்ரி என தொடர்ந்து முத்துமணியை பார்த்தாலும் சங்கர் சலீம் சைமன் opening ஷோவில்

பேசினோம். பிறகு தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள், சகோதர சவால், மாங்குடி மைனர், பைரவி, இ.ஊஞ்சலாடுகிறது, சதுரங்கம், வ.காதலியே, முள்ளும் மலரும், தப்புத்தாளங்கள் வரை முதல் நாள் தியேட்டர் சந்திப்பு தொடர்ந்தது. அடுத்து ஜஸ்டிஸ் கோபிநாத் opening ஷோவில்தான் நான் தீவிர நடிகர் திலகம் ரசிகன்

பாருங்க:  இன்று மாலை வெளியாகும் ரஜினி பட பர்ஸ்ட் சிங்கிள்

என்பது அவருக்கு தெரிய வந்தது. ஆனாலும் அந்த பழகும் தன்மையில் எந்த மாற்றமுமில்லை. அவரே நடிகர் திலகம் ரசிகர் என்பதை பிறகு என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு முதல் நாள் நான் போவது குறைய தியேட்டர் சந்திப்பு இல்லாமல் போனது(தர்ம யுத்தம் தவிர).நான் படித்து வேலை நிமித்தம் மதுரையை

விட்டு போனவுடன் இரண்டு தடவை மட்டும் பேசினேன். 1985 அக்டோபர் முதல் வாரம். ஶ்ரீதேவியில் ராஜரிஷி ஓடுகிறது. தியேட்டர் வாசலில் நண்பர்களோடு நின்று பேசும்போது வந்தார். ஒரு மணி நேரம் பல விஷயங்கள். அப்போது ஓடிக்கொண்டிருந்த முதல் மரியாதை பற்றி மிகவும் சிலாகித்தார். ராஜ ரிஷி வசூல் பற்றி பேச

பின் தீபாவளிக்கு படிக்காதவன் வருவது பற்றியெல்லாம் (நீங்க Khud dhar பார்த்திருக்கீங்களா?) பேசியது இன்றும் நினைவில். அடுத்து 1989 ஜீலை ஒரு கல்யாணத்தில் பார்த்து பேசினேன். ராஜாதி ராஜா வெற்றி பற்றி பேசியவர் அபூர்வ சகோதரர்கள் வெற்றி பற்றியும் சிலாகித்தார். எந்த நடிகரை பற்றியும் தவறாக

பேசி நான் பார்த்ததில்லை. சூப்பர் ஸ்டார் பட்டம் தாணு பேசுவது பற்றி கேட்டபோதுகூட விடுங்கண்ணே! சாருக்கு (ரஜினி) எல்லாம் தெரியும் என்றார். ரஜினயை நேரில் சந்தித்த நிகழ்வுகளை சொன்னார். அ.ரஜினிகாந்த் படப்பாடல் முத்துமணி சுடரே இவருக்காக எழுதப்பட்டது என்ற வதந்தியை பின் ரஜினியே மறுத்தார்.
அதன் பிறகு முத்துமணியை ஒரிரு முறை பார்த்ததோடு சரி. பேச முடியவில்லை. சென்ற வருடம் ரஜினி இவரை போனில் அழைத்து பேசிய ஆடியோ வந்தது. இப்போது இந்த செய்தியும். அவரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். என ரசிகர் ஒருவர் இவரை பற்றி கூறியுள்ளார்.

பாருங்க:  தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாகக் தடை விதிப்பு!
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா