Entertainment
பப்ஜி மதனின் மனைவிக்கு ஜாமீன்
சமீபத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விசயம் பப்ஜி மதனின் கைது விவகாரம். பப்ஜி மதன் என்பவர் தடை செய்யப்பட்ட விபிஎன் மூலம் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி விளையாட்டை யூ டியுபில் பதிவேற்றம் செய்து அதற்கு கெட்டவார்த்தைகள் பேசி பலரையும் ஈர்த்து பணம் சம்பாதித்தது தெரிய வந்தது. அந்த விசயம் வெளியில் தெரிந்து போலீஸ் மூவ் பெரிய அளவில் இருந்ததால் தர்மபுரிக்கு தப்பி சென்றார் பின்பு போலீஸ் தர்மபுரி சென்று மதனை கைது செய்தது.
மதனுக்கு முன்பே அவருடைய மனைவி கிருத்திகாவும் 8 மாத கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டார் தற்போது கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு கிருத்திகாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.