போலீஸ் யாருக்கும் தேர்தல் முடியும் வரை விடுமுறை இல்லை

போலீஸ் யாருக்கும் தேர்தல் முடியும் வரை விடுமுறை இல்லை

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது. இப்போதிருந்தே எங்கு பார்த்தாலும் அரசியல் பேச்சுக்கள்தான் எங்கும் அனல் பறக்கிறது.

மிகவும் பரபரப்பாக அரசியல் களம் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் தேர்தல் முடியும் வரை போலீஸ் யாருக்கும் விடுமுறை கிடையாது என தமிழக டிஜிபி திரிபாதி ஐஜி மற்றும் டிஐஜிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

இதனால் தேர்தல் முடியும் வரை போலீஸ் யாரும் விடுப்பு எடுக்க முடியாது மிக அவசரமான தேவைக்கு மட்டுமே விடுப்பு எடுக்க முடியும் என தெரிகிறது.