பத்திரிக்கையை பிடிஎஃப் வடிவில் வாட்ஸப்பில் பகிர்ந்தால் கைது- அட்மின்கள் கவனம்

பத்திரிக்கையை பிடிஎஃப் வடிவில் வாட்ஸப்பில் பகிர்ந்தால் கைது- அட்மின்கள் கவனம்

வாட்ஸப் செயலியில் இல்லாத நபர்களே இல்லை எனலாம். தகவல் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர இந்த செயலி பயன்படுகிறது. இதில் குரூப் வடிவமைத்து நண்பர்களுக்குள் அனைத்து விசயங்களையும் ஷேர் செய்யும் வசதி உள்ளது.

இதனால் இது போல குரூப்களில் யாராவது அன்றைய செய்தித்தாளோ வார இதழோ வாங்கினால் அதை அப்படியே பிடிஎஃப் ஆக மாற்றி குரூப்களில் பகிர்ந்து விடுகின்றனர்.

இதனால் செய்தித்தாள்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என பத்திரிக்கை விற்பனையாளர்கள் வழக்கு தொடுத்த நிலையில் இது போல பத்திரிக்கையை வாட்ஸப் மற்றும் சமூகவலைதளங்களில் பகிரும் நபர்கள் சமூக வலைதளமான வாட்ஸப் , பேஸ்புக் அட்மின்கள் கைது செய்யப்படுவர் என கோர்ட் எச்சரிக்கை செய்துள்ளது.