Latest News
பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து ஸ்வாமி தரிசனம் செய்த அமைச்சர் உதயக்குமார்
தைப்பூசத்தை ஒட்டி கடந்த இரண்டு மாதங்களாக பழனியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தினசரி கால்நடையாக நடந்து பல பக்தர்கள் குவிந்து பழனியில் வருகின்றனர்.
கடந்த மாதம் தைப்பூசம் முடிந்துவிட்டபோதிலும் பழனி வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவில் சென்று மொட்டை போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்.
