Published
8 months agoon
இலங்கை, பாகிஸ்தான் போன்ற சின்ன நாடுகளை தங்கள் அரவணைப்பில் நீண்ட நாட்களாக வைத்திருந்தது சீனா. உலகத்தில் பல பெரிய நாடுகளோடு ஒற்றுமையோடு இல்லாமல் இருக்கும் சீனா பல சின்ன நாடுகளை கைக்குள் வைத்துக்கொண்டது.
குறிப்பாக இந்தியாவோடு பரம எதிரியாகவே இருந்து வரும் சீனா, இந்தியாவின் முக்கிய எதிரியான பாகிஸ்தானை தன் கைக்குள் வைத்துக்கொண்டது. இந்தியாவிடம் நட்பு பாராட்டும் மற்றொரு அண்டை நாடான இலங்கையையும் நட்பாக வைத்துக்கொண்டது.
இலங்கையில் சீனர்களின் ஆக்ரமிப்பை அதிகப்படுத்தி, அங்கு துறைமுகம் போன்றவற்றை கட்டி இந்தியாவின் கடல் வழி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இதற்காக தனது நட்பு நாடுகளுக்கு கடன் என்ற பெயரில் சீனா கொடுத்தது ஏராளம். அந்த கடனை எல்லாம் வாங்கி விட்டு வடிவேலு சொல்வது போல குண்டக்க மண்டக்க இலங்கையின் நிலைமை ஆகி,இன்று பொருளாதாரத்தில் மிக மோசமாய் போய்விட்டது.
எல்லா பொருட்களும் விலை தாறுமாறாய் ஏறி விட்டது. தாறுமாறாய் ஏறினாலும் பொருட்களும் கிடைக்கவில்லை. அதே நிலைமை பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சில தினங்கள் முன் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்
இலங்கையில் வரலாறு காணாத போராட்டம்- இன்று முழு ஊரடங்கு வேலை நிறுத்தம்
கஷ்ட காலம் என்பது எப்போதுமே இருக்காது- இலங்கையில் அண்ணாமலை பேச்சு
இலங்கையில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம்
இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
கடும் பொருளாதார நெருக்கடியில் பெட்ரோல் விலை மீண்டும் தாறுமாறு உயர்வு