தமிழக அரசின் தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த 2018ம் வருடமே அறிவித்துவிட்டது. ஆனாலும், சில இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதை தடுப்பதற்காக அமைச்சர் வேலுமணி சட்டசபையில் இன்று ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.